Friday, May 29, 2020
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
Sunday, May 10, 2020
அதிரடி சலுகையுடன் BSNL 4G சேவை... இலவசமாக சிம் பெறுவது எப்படி?
BSNL நிறுவனம் சமீபத்தில் தனது 2G/ 3G சிம்களை 4G-ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது, இதனால் அதன் பயனர்களுக்கு விரைவான நெட்வொர்க்கை வழங்க முடியும் என நிறுவனம் நம்புகிறது.
நாட்டில் 4G நெட்வொர்க்கை வழங்குவதில் ஆபரேட்டர் ஐந்து ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டுள்ள நிலையிலும், தற்போது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் BSNL இந்த முடிவை முன்னெடுத்துள்ளது.
நாட்டில் 4G வாடிக்கையாளரை தன் வசமாக்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு பிரதான போட்டியாளர்களான ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய இரண்டும் மிருகத்தனமான விலை யுத்தம் மற்றும் கடன் காரணமாக வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றன. இந்நிலையில் BSNL இந்த கட்டத்தில் பயனர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் 4G நுட்பத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட விரும்பினால், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் BSNL தனது சேவைகளை கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் தொடங்க வேண்டும் என்பதும் இதன் பொருள்.
உண்மையில், ஆபரேட்டர் ஏற்கனவே தங்கள் 3G சிம்மை 4G சிம்களாக இலவசமாக மேம்படுத்த விரும்புவோருக்கு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மேலும் இது எல்லா வட்டங்களிலும் கிடைக்கும்.
இந்த சலுகை பயனர் பெற முதலில் ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் பொருள் நீங்கள் ரூ.100 செலுத்தி ஒரு 4G சிம்மை பெறலாம்.
4G சிம் செயல்படுத்துவது எப்படி?
படி 1: முதலில், உங்கள் BSNL எண்ணிலிருந்து ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.
படி 2: நீங்கள் அனுப்பும் இந்த செய்தியில் RE4G என எழுத வேண்டும், அதை 53734 க்கு அனுப்ப வேண்டும்.
படி 3: அதன் பிறகு, நீங்கள் ஆபரேட்டரிடமிருந்து செய்தியைப் பெறுவீர்கள், அதற்கு நீங்கள் 'RE4G YES' என பதிலளிக்க வேண்டும்.
படி 4: பின்னர், நீங்கள் நிறுவனத்திடமிருந்து மற்றொரு செய்தியைப் பெறுவீர்கள். அதன் பிறகு, பழைய சிம்மிலிருந்து பிணைய சமிக்ஞை மறைந்து போக நீங்கள் காத்திருக்க வேண்டும்.
படி 5: பின்னர், புதிய 4G சிம்மில் நீங்கள் சமிக்ஞையைப் பெறுவீர்கள், பின்னர் நீங்கள் உங்கள் பழைய எண்ணைப் பயன்படுத்தலாம்.
அன்புத் தொல்லைகளை தூக்கிக் கடாசுங்க... அறியவேண்டிய வாட்ஸ் அப் அப்டேட்
WhatsApp Latest Update: உலகெங்கிலும் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் ஆப்களில் வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான ஒன்றாகும். வீடியோ, குரல் (voice ) மற்றும் டெக்ஸ்ட் (text) மூலமாக உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து இருக்க இது அனுமதிக்கிறது. எனினும் சில நேரங்களில் உங்களது கைபேசி எண் நீங்கள் பேச விரும்பாத நபர்கள் அல்லது விளம்பர பட்டியலில் (promotional list) சேர்க்கப்படும். அந்த நேரங்களில் நீங்கள் இந்த தொடர்புகளில் (contact) இருந்து குறுஞ்செய்தி பெறுவதை நிறுத்த வேண்டும் என நினைப்பீர்கள்.
இந்த தொடர்புகளில் இருந்து குறுஞ்செய்தி பெறுவதை நிறுத்த நீங்கள் அவற்றை எளிதாக வாட்ஸ் ஆப்பில் தடுக்கலாம் (block).
ஒரு தொடர்பை தடுத்து விட்டால் அந்த நபர் ஏதாவது டெக்ஸ்டை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று முயன்றால் அது வராது. உங்களது last online status, display picture, description போன்றவற்றை தடுத்து வைத்துள்ள நபரால் பார்க்கவும் முடியாது. தடுத்து வைத்துள்ள தொடர்பை unlock செய்யாமல் நீங்களும் அவருக்கு எந்த குறுஞ்செய்தியையும் அனுப்ப முடியாது.
* வாட்ஸ் ஆப்பை திறந்து நீங்கள் தடுக்க விரும்பும் நபரின் chat க்கு செல்லவும்.
* அவருடைய பெயர்/ எண்ணில் தட்டி contact info page ஐ திறக்கவும்.
* கீழே ஸ்க்ரால் செய்து ‘Block this contact’ பொத்தானை தட்டவும்.
* அந்த தொடர்பை தடுக்க (block) வேண்டுமா வேண்டாமா என்று ஒரு உறுதிபடுத்தலை உங்களிடம் கேட்கும்.
* confirm என்பதை அழுத்தி அந்த தொடர்பை தடுக்கவும்.
ஒரு தொடர்பை எவ்வாறு வாட்ஸ் ஆப் (ஆண்ட்ராய்டில்) தடுக்க வேண்டும்
* வாட்ஸ் ஆப்பை திறந்து நீங்கள் தடுக்க விரும்பும் நபரின் chat க்கு செல்லவும்.
* chatboxன் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.
* ‘More’ விருப்ப தேர்வை சொடுக்கி ‘Block’ விருப்பத் தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
* அடுத்து அது உங்களுடைய உறுதிப்படுத்தலைக் கேட்கும் அதை கொடுத்தவுடன் அந்த நபருடைய தொடர்பை தடுத்துவிடும்.
ஒரு தொடர்பை unblock செய்ய, chatbox window ஐ திறந்து chatboxன் உள்ளே காண்பிக்கப்படும் unblock notification ஐ அழுத்தவும்.
MI BOX 4K ஸ்ட்ரீமிங் பெட்டி அறிமுகம்! விலை ரூ.3,499 மட்டுமே!
ஜியோவின் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் அறிமுகம்!
2,399 ப்ரீபெய்ட் ப்ளான்
ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் இந்த ப்ளான் 365 நாட்கள் செல்லுபடியாகும். நிறுவனம் பிப்ரவரியில் ரூ.2,121 ப்ளானை கொண்டு வந்தது. அந்த ப்ளானில் ஜியோ ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 336 நாட்கள் வேலிடிட்டியை வழங்கியது.
ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 ஆட்-ஆன் பேக்குகள்:
ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானுடன், ஜியோ ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 ஆட்-ஆன் பேக்கை கொண்டுவந்துள்ளது. ரூ.151 ப்ளானில் 30 ஜிபி கூடுதல் டேட்டா, ரூ.201 ப்ளானில் 40 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.251 ப்ளானில் 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். அன்றைய டேட்டா பேக் முடிந்த பிறகும் அதிவேக இணையத்தைப் பயன்படுத்த இந்த ப்ளான்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆட்-ஆன் பேக்குகள் வெவ்வேறு வேலிடிட்டியை வழங்குகின்றன. வாடிக்கையாளரின் தற்போதைய ப்ளான் வேலிடிட்டி முடியும் வரை இந்த கூடுதல் பேக்கிலிருந்து கூடுதல் டேட்டாவை பயன்படுத்தப்படலாம்.
கூடுதலாக, ரூ.11, ரூ.21, ரூ.31, ரூ.51 மற்றும் ரூ.101 ஆட்-ஆன் பேக்குகள் முன்பு இருந்ததைப் போலவே அதே பலன்களை வழங்கும்.