001-234-567-8910

5th Avenue Madson, NY758, USA

Get Update on our recent Gadgets & Tabs

Friday, May 29, 2020

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

 
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் இரண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. 
 
ஆம், சாம்சங் நிறுவனம் இரண்டு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்11 என்ற பெயரில் இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகமாக உள்ளது. 
 
இந்த இரு ஸ்மார்ட்போன்களும் ரூ. 15,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. இவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

பத்து நிமிடத்தில் வாங்கலாம் பான் கார்டு! – ஆதார் போதும்!

 
பான் எண் பெற விண்ணப்பித்து மாத கணக்காக காத்திருக்கும் சிரமத்தை குறைக்க மத்திய அரசு உடனடி பான் எண் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தியாவில் தொழில் தொடங்க மற்றும் பல்வேறு பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு எண் அவசியமான ஒன்றாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்து 20 நாட்களுக்கு பிறகே பான் எண் கிடைக்கும் என்பதால் பலர் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்தன. இந்நிலையில் ஆதார் கார்டு அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் வழிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு ஆதார் எண்ணும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் போதுமானது. ஆன்லைனில் விண்ணப்பித்த பத்து நிமிடத்தில் இ-பான் கார்டாக அதை தரவிறக்கி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Sunday, May 10, 2020

FB டார்க் மோடு பயன்பாட்டு முறை தற்போது டெஸ்க்டாப்பிலும் அறிமுகம்...!

 

முகநூல் டார்க் மோடு பயனர்களுக்கு நற்செய்தி, தற்போது டெஸ்க்டாப்பிலும் டார்க் மோடு பயன்படுத்தலாம்!!

முகநூல் வெள்ளிக்கிழமை அனைத்து பயனர்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட மற்றும் அதிவேக டெஸ்க்டாப் பயன்பாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோடு பயன்முறையை வெளியிட்டது. இருண்ட பயன்முறை பில்லியன் கணக்கான பயனர்களுக்கு குறைந்த பிரகாசத்தையும், மாறுபாட்டையும், அதிர்வுத்தன்மையையும் அனுபவிக்க உதவும், இதனால் குறைந்த வெளிச்சத்தில் பயன்படுத்த திரை கண்ணை கூசும். "டார்க் பயன்முறையுடன் புதிய அதிவேக தளவமைப்பு வாட்சில் வீடியோக்களைப் பார்ப்பது ஒரு சிறந்த அனுபவமாக அமைகிறது" என்று முகநூல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, டார்க் பயன்முறை முகநூல் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப்பிலும் கிடைக்கிறது. மொபைல் அனுபவத்தைப் போலவே, புதிய டெஸ்க்டாப் வலைத்தளமும் புதிய நெறிப்படுத்தப்பட்ட வழிசெலுத்தலுடன் வேகமானது, வீடியோக்கள், விளையாட்டுகள் மற்றும் குழுக்களைக் கண்டுபிடிப்பது எளிது, அதே நேரத்தில் முகப்பு பக்கம் மற்றும் பக்க மாற்றங்கள் வேகமாக ஏற்றப்படும்.

முகநூலில் டார்க் மோடு பயன்முறையைப் பெறுவது எப்படி?

உங்கள் முகநூல் கணக்கை ஓபன் செய்யவும். 

உங்கள் முகநூல் பக்கத்தில் உள்ள வழது மூலையில் உள்ள கீழ்தோன்றும் மெனுவை கிளிக் செய்யவும். 

பின்னர்,  'Switch to New Facebook' எனற பதிவை கிளிக் செய்யவும். 

இதையடுத்து, பாப்-அப் செய்தி தோன்றும், மேலும் புதிய வடிவமைப்பைப் பெற நீங்கள் இருண்ட பயன்முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

பின்னர் வழது பக்கத்தில் உள்ள கீழ்தோன்றும் மெனுவை கிளிக் செய்யவும். அதில், "Dark mode" எனற பாதிப்பை ஆன் செய்தவுடன் உங்கள் Facebook பக்கம் டார்க் மோடுக்கு மாறும். 

 
நிகழ்வுகள், பக்கங்கள், குழுக்கள் மற்றும் விளம்பரங்களை பேஸ்புக்கில் எளிதாக உருவாக்குங்கள். நீங்கள் நிகழ்நேரத்தில் தொடங்கும் புதிய குழுவை முன்னோட்டமிடுங்கள், அதை உருவாக்கும் முன் மொபைலில் அது எப்படி இருக்கும் என்பதைப் பாருங்கள்" என்று பேஸ்புக் கூறியது. கடந்த ஆண்டு F8 டெவலப்பர் மாநாட்டில் புதிய Facebook.com அறிவிக்கப்பட்டது.

அதிரடி சலுகையுடன் BSNL 4G சேவை... இலவசமாக சிம் பெறுவது எப்படி?

 

BSNL நிறுவனம் சமீபத்தில் தனது 2G/ 3G சிம்களை 4G-ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது, இதனால் அதன் பயனர்களுக்கு விரைவான நெட்வொர்க்கை வழங்க முடியும் என நிறுவனம் நம்புகிறது.

BSNL நிறுவனம் சமீபத்தில் தனது 2G/ 3G சிம்களை 4G-ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது, இதனால் அதன் பயனர்களுக்கு விரைவான நெட்வொர்க்கை வழங்க முடியும் என நிறுவனம் நம்புகிறது.

நாட்டில் 4G நெட்வொர்க்கை வழங்குவதில் ஆபரேட்டர் ஐந்து ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டுள்ள நிலையிலும், தற்போது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் BSNL இந்த முடிவை முன்னெடுத்துள்ளது.

நாட்டில் 4G வாடிக்கையாளரை தன் வசமாக்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு பிரதான போட்டியாளர்களான ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய இரண்டும் மிருகத்தனமான விலை யுத்தம் மற்றும் கடன் காரணமாக வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றன. இந்நிலையில் BSNL இந்த கட்டத்தில் பயனர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் 4G நுட்பத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட விரும்பினால், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் BSNL தனது சேவைகளை கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் தொடங்க வேண்டும் என்பதும் இதன் பொருள்.

உண்மையில், ஆபரேட்டர் ஏற்கனவே தங்கள் 3G சிம்மை 4G சிம்களாக இலவசமாக மேம்படுத்த விரும்புவோருக்கு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மேலும் இது எல்லா வட்டங்களிலும் கிடைக்கும். 

இந்த சலுகை பயனர் பெற முதலில் ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.  இதன் பொருள் நீங்கள் ரூ.100 செலுத்தி ஒரு 4G சிம்மை பெறலாம்.


4G சிம் செயல்படுத்துவது எப்படி?

படி 1: முதலில், உங்கள் BSNL எண்ணிலிருந்து ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.
படி 2: நீங்கள் அனுப்பும் இந்த செய்தியில் RE4G என எழுத வேண்டும், அதை 53734 க்கு அனுப்ப வேண்டும்.
படி 3: அதன் பிறகு, நீங்கள் ஆபரேட்டரிடமிருந்து செய்தியைப் பெறுவீர்கள், அதற்கு நீங்கள் 'RE4G YES' என பதிலளிக்க வேண்டும்.
படி 4: பின்னர், நீங்கள் நிறுவனத்திடமிருந்து மற்றொரு செய்தியைப் பெறுவீர்கள். அதன் பிறகு, பழைய சிம்மிலிருந்து பிணைய சமிக்ஞை மறைந்து போக நீங்கள் காத்திருக்க வேண்டும்.
படி 5: பின்னர், புதிய 4G சிம்மில் நீங்கள் சமிக்ஞையைப் பெறுவீர்கள், பின்னர் நீங்கள் உங்கள் பழைய எண்ணைப் பயன்படுத்தலாம்.


ப்ளூ டிக் காட்டாமல் வாட்ஸ் அப் மெசேஜ் பார்ப்பது எப்படி?

 

 
WhatsApp Tricks: இந்த தந்திரம் வேலை செய்ய டெக்ஸ்ட் வரும்போது வாட்ஸ் அப் திறக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய iPhone ஐ iOS 13...

WhatsApp: பிரபலமான குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்பான வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட்களை வாசிக்கும் போது பொதுவாக ஒரு நீல நிற சரி குறியீடு ஏற்படும். இதன் மூலம் நாம் அதை படித்து விட்டதாக அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் அறிந்துக் கொள்வார். ஆனால் iPhoneல் இந்த நீல நிற சரி குறியீடு ஏற்படாமலும், அனுப்பியவர் அறியாமலும் பயனர்களால் குறுஞ்செய்திகளைப் படிக்க முடியும்.

“read receipts” ஐ தவிர்க்க பெரும்பாலானவர்கள் Airplane Mode ஐ பயன்படுத்துவார்கள். இந்த முறை டேட்டாவையும் மூடுகிறது. எனவே அனுப்பியவரின் வாட்ஸ் அப், அந்த குறுஞ்செய்தி வாசிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள முடியாது. ஆனால் Airplane Mode ஐ turn off செய்தவுடன் நீல நிற சரி குறியீடு தோன்றும். இதற்கான அர்த்தம் பெறுனர் (recipient) offline இல் இருக்க வேண்டும் என்பதாகும்.

.ஒருவர் read receipts முழுவதுமாக turn off செய்யலாம் ஆனால் அவர்கள் மற்ற பயனர்களிடமிருந்து அவர்களைப் பார்க்க மாட்டார்கள்.

எனினும் இந்த இரண்டு தந்திரங்களையும் விட சிறப்பாக வேலை செய்யும் முறை ஒன்று உள்ளது. அதற்கு settings மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த தந்திரம் வேலை செய்ய டெக்ஸ்ட் வரும்போது வாட்ஸ் அப் திறக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய iPhone ஐ iOS 13 க்கு மேம்படுத்தியுள்ளதையும் நீங்கள் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குறுஞ்செய்தி வரும் போது lock screen ல் ஒரு notification தோன்றும். திரையில் உள்ள செய்தியில் வழக்கத்தை விட சற்று நீண்ட நேரம் அழுத்தினால் முழு டெக்ஸ்டும் தோன்றும்.

குறுஞ்செய்தி மிக நீளமாக இருந்தாலும் அதை முழுவதுமாக மேலே அல்லது கிழே நகர்த்தி பார்க்கலாம். முக்கியமாக இந்த notification ஐ வாசிக்கும் போது நில நிற சரி குறியீடை அது தூண்டாது. உங்களுடைய டெக்ஸ்ட் notification ஐ நீங்கள் swipe செய்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் அதை swipe செய்துவிட்டால் உங்களால் டெக்ஸ்டில் snoop செய்ய முடியாது.

இது iOS 13 க்கு மேம்படுத்தக்கூடிய எந்த கருவியிலும் iPhone 6S மற்றும் 6S Plus, iPhone SE, iPhone 7 மற்றும் 7 Plus, iPhone 8 மற்றும் 8 Plus, iPhone X, iPhone XS, XS Max மற்றும் XR, iPhone 11, 11 Pro மற்றும் 11 Pro Max உட்பட அனைத்திலும் இது வேலை செய்யும்.

அன்புத் தொல்லைகளை தூக்கிக் கடாசுங்க... அறியவேண்டிய வாட்ஸ் அப் அப்டேட்

 

 
Whatsapp news in tamil: உங்களது last online status, display picture, description போன்றவற்றை தடுத்து வைத்துள்ள நபரால் பார்க்கவும் முடியாது.

WhatsApp Latest Update: உலகெங்கிலும் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் ஆப்களில் வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான ஒன்றாகும். வீடியோ, குரல் (voice ) மற்றும் டெக்ஸ்ட் (text) மூலமாக உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து இருக்க இது அனுமதிக்கிறது. எனினும் சில நேரங்களில் உங்களது கைபேசி எண் நீங்கள் பேச விரும்பாத நபர்கள் அல்லது விளம்பர பட்டியலில் (promotional list) சேர்க்கப்படும். அந்த நேரங்களில் நீங்கள் இந்த தொடர்புகளில் (contact) இருந்து குறுஞ்செய்தி பெறுவதை நிறுத்த வேண்டும் என நினைப்பீர்கள்.

இந்த தொடர்புகளில் இருந்து குறுஞ்செய்தி பெறுவதை நிறுத்த நீங்கள் அவற்றை எளிதாக வாட்ஸ் ஆப்பில் தடுக்கலாம் (block).

ஒரு தொடர்பை தடுத்து விட்டால் அந்த நபர் ஏதாவது டெக்ஸ்டை உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று முயன்றால் அது வராது. உங்களது last online status, display picture, description போன்றவற்றை தடுத்து வைத்துள்ள நபரால் பார்க்கவும் முடியாது. தடுத்து வைத்துள்ள தொடர்பை unlock செய்யாமல் நீங்களும் அவருக்கு எந்த குறுஞ்செய்தியையும் அனுப்ப முடியாது.


ஒரு தொடர்பை எவ்வாறு வாட்ஸ் ஆப் (iOS)ல் தடுக்க வேண்டும்

* வாட்ஸ் ஆப்பை திறந்து நீங்கள் தடுக்க விரும்பும் நபரின் chat க்கு செல்லவும்.

* அவருடைய பெயர்/ எண்ணில் தட்டி contact info page ஐ திறக்கவும்.

* கீழே ஸ்க்ரால் செய்து ‘Block this contact’ பொத்தானை தட்டவும்.

* அந்த தொடர்பை தடுக்க (block) வேண்டுமா வேண்டாமா என்று ஒரு உறுதிபடுத்தலை உங்களிடம் கேட்கும்.

* confirm என்பதை அழுத்தி அந்த தொடர்பை தடுக்கவும்.

ஒரு தொடர்பை எவ்வாறு வாட்ஸ் ஆப் (ஆண்ட்ராய்டில்) தடுக்க வேண்டும்

* வாட்ஸ் ஆப்பை திறந்து நீங்கள் தடுக்க விரும்பும் நபரின் chat க்கு செல்லவும்.

* chatboxன் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.

* ‘More’ விருப்ப தேர்வை சொடுக்கி ‘Block’ விருப்பத் தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

* அடுத்து அது உங்களுடைய உறுதிப்படுத்தலைக் கேட்கும் அதை கொடுத்தவுடன் அந்த நபருடைய தொடர்பை தடுத்துவிடும்.

ஒரு தொடர்பை unblock செய்ய, chatbox window ஐ திறந்து chatboxன் உள்ளே காண்பிக்கப்படும் unblock notification ஐ அழுத்தவும்.

Facebook மறு வடிவமைப்பு செய்யப்பட்ட வலைதளம் இப்போது நேரலையில்

 

Facebook: ஒரு வேளை டார்க் மோடை (dark mode) எனேபிள் (enable) செய்யவேண்டுமென்றால், கீழ் அம்பு பொத்தானை தட்டி Dark Mode toggle ஐ தட்டவும்

Facebook Update: முகநூல் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட தனது வலைதளத்தை டார்க் மோட் அம்சத்துடன் வெள்ளியன்று வெளியிட்டுள்ளது. நிறுவனம் தனது தளத்தின் புதிய வடிவமைப்பை முதலில் F8 developer conference ல் 2019 ஆம் ஆண்டு காண்பித்தது. உண்மையில், முகநூல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிய எண்ணிக்கையிலான பயனர்களுடன் தனது புதிய அம்சத்தை சோதிக்க தொடங்கியது.

இப்போது புத்தம் புதிய டெஸ்க்டாப் பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு நேரலையில் கிடைக்கிறது. நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் அடுத்த சில நாட்களில் இது கிடைக்கும்.

முகநூலின் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெஸ்க்டாப் தளத்தில் புதிதாக என்ன உள்ளது.

புதிய வடிவமைப்பு டெஸ்க்டாப் பதிப்பை கைபேசி அனுபவத்திற்கு ஒத்ததாக ஆக்குகிறது. புதிய வடிவமைப்பில் வீடியோக்கள், விளையாட்டுகள் (Games) மற்றும் குழுக்களை (Groups) கண்டுபிடிப்பது எளிதாக உள்ளது என நிறுவனம் கூறுகிறது. முகநூலின் கைபேசி ஆப்-ஐ போல டெஸ்க்டாப் தளமும் எளிதில் லோடாகும் (load faster). புதிய வடிவமைப்பு Events, Pages, Groups, மற்றும் விளம்பரங்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது.

முகநூலின் புத்தம் புதிய வலைதளத்துக்கு எப்படி மாறுவது?

* முகநூலின் முகப்பு பக்கத்துக்கு செல்லவும். மேல் வலது மூலையில் உள்ள கீழ் அம்பு (down arrow) பொத்தானை தட்டவும்.

* “Switch to new Facebook” என்பதை தேர்வு செய்யவும்.

* ஒரு வேளை டார்க் மோடை (dark mode) எனேபிள் (enable) செய்யவேண்டுமென்றால், கீழ் அம்பு பொத்தானை தட்டி Dark Mode toggle ஐ தட்டவும்.

கரோனா வைரஸ் தொற்று காலத்தில் முகநூல், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பயன்பாடு இரட்டிப்பாகி உள்ளது.

புதிதாக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெஸ்க்டாப் அனுபவத்தின் சிறப்பம்சமே புதிய டார்க் மோட் தான் அது கண் சேர்வை குறைக்கவும், readability of text மற்றும் better contrast ஐ கொடுக்கும். கடந்த மாதம் முகநூல் டார்க் மோடை முகநூல் Messenger க்கு அறிமுகப்படுத்தியது. முகநூலால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் ஆப்பிலும் டார்க் மோட் கடந்த மார்சில் அறிமுகப்படுத்தப்பட்டது

Hey, we've just launched a new custom color Blogger template. You'll like it - https://t.co/quGl87I2PZ
Join Our Newsletter